புதன், 21 அக்டோபர், 2009

நபி(ஸல்) அவர்களின் வழியில்(கற்று தந்த முறைப்படி) அஸ்ஸலாமு அலைக்கும் என்று அழகாக சொல்லுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ அனைத்தும் முஸ்லிம்சகோதரர்களுக்கும்,
அளவற்ற அருளானலும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் திருப்பெயர்கொண்டு ஆரம்பம் செய்கிறேன்,
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காகஅருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லிஅவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்(33:56)அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலாஇப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக்அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலிஇப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்
இன்று சிலர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லாமல் ஸலாம் என்று சொல்லிவருகிறார்கள். அது மார்க்கத்திற்கு முற்றிலும் முரனானது. நபி(ஸல்)அவ்வாறு கற்று தரவில்லை.நபி(ஸல்) அவர்களை பின்பற்றுகிறோம் என்று சொல்லிகொண்டு அந்த நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த முறைப்படி பின்பற்றாமல் தனதுசுயகருத்தை கருத்தில் கொண்டு பின்பற்றுகிறார்கள்.
ஸலாம் என்று குரானில் வரும் வார்த்தைக்கு நபி(ஸல்) அவர்கள் மட்டுமே எப்படி சொல்ல வேண்டும், மற்றும் ஸலாமிற்கு பதில் எவ்வாறு கூற வேண்டும் என்று கற்று தரமுடியும், நேரடியாக குரானை மட்டும் பின்பற்றலாம் என்று சொல்பவர்கள் ஈமான் கொள்ளுங்கள், தொழுது வாருங்கள், நோன்புவைத்து வாருங்கள்,ஜகாத் கொடுத்து வாருங்கள் ஹஜ் செய்யுங்கள், என்று நபி(ஸல்) அவர்களின் முறையில்லாமல் எப்படி செய்யமுடியும், அது போல் குரானில் ஸலாம் என்ற வார்த்தைக்கு விளக்கம் எப்படி கூற வேண்டும் என்றும்,ஸலாமிற்கு பதில் எவ்வாறு கூற வேன்டும் என்று நபி(ஸல்) அவர்கள் மட்டுமே கற்று தர முடியும்.,
வேதக்காரர்கள் மற்றும் மாற்றுமதத்தவருக்கு ஸலாம் முதலில் கூறாதீர்கள்:
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்(உங்களுடன் பகைமை பாராட்டும்)யுதர்களும்,கிருத்துவர்களும், நீங்கள் முதலில் ஸலாம் கூறாதீர்கள்(எதிரிகளான) அவர்களை நீங்கள் சந்திக்க நேரிட்டால் பாதையின் ஓரத்தில்விட்டுவிட்டு செல்லுங்கள் என அபூஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்( முஸ்லிம்(ரஹ்),திர்மதி(ரஹ்),அபூதாவுத்(ரஹ்),முஸ்னத் அஹ்மத்(ரஹ்))

வேதக்காரர்கள் மற்றும் மாற்றுமதத்தவர்கள் ஸலாம் கூறினால் பதில் கூறும்முறை:
வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் வ அலைக்கும்' அவ்வாறேஉங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(புஹாரி(ரஹ்))
யூதர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் அவர்களில் சிலர் 'அஸ்ஸாமுஅலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே,(அவர்களுக்கு பதிலாக) 'வ அலைக்க' (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றுசொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்(புஹாரி(ரஹ்))
யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமுஅலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர். 'வஅலைக்கு முஸ்ஸாமு வல்லஅனா'' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும்உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,'ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ்விரும்புகிறான்'' என்றார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள்சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?' என்று கேட்டேன் அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் ('அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து) 'வஅலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என பதிலளித்து விட்டேன்''என்று கூறினார்கள் ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(புஹாரி(ரஹ்))
இங்கு முதலில் ஸலாம் சொன்னால் என்று பயன்படுத்திவிட்டு அது எவ்வாறுகூறினார்கள் என அடுத்த செய்திகளில் காணமுடிகிறாது. உங்கள் கூற்றுபடிபார்த்தால் ஸலாம் என்று சொன்னால் அதே வார்த்தையான ஸலாம் என்று தான் பயன்படுத்திருக்கே வேண்டும் அதற்கு பதிலும் நபி(ஸல்) அவர்களும் ஸலாம் என்றுசொல்லி இருக்க வேண்டும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் வா அலைக்கும் மட்டும்தான் சொன்னார்கள். ஆனால் ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான்அர்த்தம் தவிற. ஸலாம் என்றால் ஸலாம் என்ற அர்த்தம் கிடையாது. அஸ்ஸாமுஅலைக்கும் என்று சிலர் யூதர்கள் ஸலாம் சொல்கிறார்கள் அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் பதில் வா அலைக்கும் என்று சொல்ல சொன்னார்கள்..வேதக் கொடுக்கப்பட்டவர்களுக்கு(தவ்ராத்,இன்சில்,ஜபூர்) அதாவது அல்லாவைஏற்று நபி(ஸல்) அவர்களை ஏற்க மறந்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்குவா அலைக்கும் என்று தான் பதில் அளிக்க சொன்னார்கள்..
மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:
உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையேபதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 4:86)இவ்வசனத்திற்கு மறுப்பவர்களின் விளக்கம்:உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும்வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல. எனவே
நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையைஅல்லது அதையே பதிலாக சொல்லலாம்.
இவ்வசனத்திற்கு நபி(ஸல்) அவர்களின் விளக்கம்:சல்மான் அல் பாரிசி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸுலல்லா எனறு ஸலாம்(முகமன்)கூறினார், அதற்கு வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹம்மத்துல்லாஹ் என்று பதில்கூறினார்கள். பின்னர் மற்றொருவர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸுலல்லாவரஹம்மத்துல்லா என்று முகமன் கூறினார், நபி(ஸல்) அவர்கள் வ அலைக்கும்வஸ்ஸலாம் வரஹம்மத்துல்லாஹி வபரகாத்துஹீ என்று பதில் கூறினார்கள்(இருவரின் முகமனை கேட்டுவிட்ட) மற்றொருவர் வந்தார், அவர் அஸ்ஸலாமு அலைக்கயாரஸீலல்லா வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ என்று முகமன் கூறினார். அதற்குவ அலைக்க என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அப்போது அந்த மனிதர்அல்லாவின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணிமாகட்டும்.இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உங்களிடம் வந்து ஸலாம் கூறும் போது நீங்கள்எனக்கூறினதை விட அதிகமான அதிகமான வார்த்தைகளை கொண்டு அவர்களுக்கும் பதில்கூறினீர்கள் என்ன காரணம் என்று வினவினார், அதற்கு நபி(ஸல்) அவர்கள்அதிகமாக கூறுவதற்கு எதையும் விட்டு வைக்க வில்லையே( எல்லாவார்த்தைகளையும் நீங்கள் கூறிவிட்டீர்கள்) உங்கலூக்கு ஸலாம்(முகமன்)கூறப்பட்டால் அதைவிடச் சிறந்த முறையில் பதில் ஸலாம் (முகமன்) அல்லதுஅதையே யே திருப்பி கூறுங்கள்(4:86) என்று அல்லா குறிப்பிட்டுள்ளான் எனவேநீங்கள் கூறியதயே நாம் உங்களுக்கு பதிலாக கூறிவிட்டோம் என்று சொன்னார்கள்( குரான் தஃப்சீர் தபரி(ரஹ்), குரான் தஃப்சீர் இப்னு கதீர்(ரஹ்), மற்றும்
தப்ரானி(ரஹ்))
நமது அருமை நாயகம் முகம்மது நபி(ஸல்) அவர்களின் விளக்கம் மட்டுமே இங்குஎடுத்து செயல் படுத்துவது கட்டாய கடமையாகும் முடியும்.அல்லாவின் வசனத்திற்கு அவர்கள் மட்டுமே விளக்கம் அளிக்க கூடியமே தவிற சுயசிந்தனையாளர்களால் சொல்லபடக்கூடிய கருத்துகள் எடுத்து செயல் படுத்தமுடியாது...
அதனால் ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்பது தான் நபி(ஸல்) அவர்கள் அழகாக கற்று கொடுத்து இருக்கிறார்கள். அதனால் சகோதரர்கள்அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..அது தான் நபி(ஸல்)
அவர்களின் வழியாகும்..மேலும் மிகவும் கவனிக்க வேண்டியவை
ஸலாம் என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி:அல்லா குரானில்:ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை(அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்குநன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக்கூறப்படுகிறது)(அல்-குர்-ஆன்24:27)நபி(ஸல்) அவர்களின் சத்திய வார்த்தைகள்:ஒருவர் ஒரு வீட்டில் நுழையும் முன் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என அனுமதிகோரட்டும்.அருமை மகனே! நீ உனது குடும்பத்தினரிடம் சென்றால் ஸலாம் கூறு?அது உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பரக்கத்தாக அமையும் என அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் (திர்மிதீ(ரஹ்))அல்லா ஸலாம் சொல்லி அனுமதி கேளுங்கள்.. அல்லாவின் வசனத்திற்கு நபி(ஸல்)அவர்களும், சகபாக்கள்(ரலி) அவர்களும் தான் விளக்கம் அளிக்க முடியும் தவிரவேற யாரும் அதற்கு விளக்கம் கொடுத்தால் அது ஏற்று கொள்ள முடியாது.மேலும்நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒருமனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதிகேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி(ஸல்) அவர்கள் தம் பணியாளரிடம், நீசென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது)'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்றுகூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான்உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்க,அவர் உள்ளே வந்தார்" என ரிப்யீ இப்னு ஹிராஷ் (ரலி) அறிவிக்கிறார். (நூல்:அபூதாவூத்(ரஹ்))
முக்கியமாக கவனிக்க வேண்டியவை:''நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. 'ஸலாம்' கூறாமல், அவர்கள் இருந்தஅறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்"நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி(ஸல்)அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என கில்தா இப்னு ஹன்பல் (ரலி)அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது(ரஹ்), அபூதாூது(ரஹ்) மற்றும் திர்மிதீ(ரஹ்))
ஸலாம் கூறாமல் என்று சொன்ன சகாபி(ரலி) அவர்கள் மறுபடியும் ஸலாம் என்றவார்த்தையை சொல்லி செல்லவில்லை.. அந்த சகாபி(ரலி) அவர்கள் பயன் படுத்தியவார்த்தை அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான். எனவே ஆனால் ஸலாம் என்றால்அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான் அர்த்தம் தவிற. ஸலாம் என்றால் ஸலாம் என்றஅர்த்தம் கிடையாது.
நபி(ஸல்) (குரானே) காட்டி தந்த வழி:
''நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால்,வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ,இடப்புறமோ ஒதுங்கி நின்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்வார்கள்""என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் (ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்(ரஹ்))ஸலாம் என்று ஹதிஸ் களில் வரும் வார்த்தை, ஆனால் அதனால் ஸலாம் என்றுவருவதால் ஸலாம் என்று சொல்வது கூடாது என மேலே கூறப்பட்டுள்ளது. ஸலாம்என்றால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று தான் அர்த்தம் என்று நபி(ஸல்)அறிவித்துள்ளார்கள்.ஸலாம் என்று மட்டும் வந்துள்ள ஹதிஸ்களும் உள்ளன்அதையும் கீழே இடம்பெற்றுள்ளது.. அதை நபி(ஸல்) அவர்களின் விளக்கம் முன்புஇடம் பெற்றுள்ளது..''இரவில்நபி(ஸல்) தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள்எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்காக(மட்டும்)கேட்கும்படியாகவும் 'ஸலாம்" கூறுவார்கள்" என மிக்தாத் (ரலி)அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்(ரஹ்))
''ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில்நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன்.இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டேவெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கைவைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு'ஸலாம்" கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூமாலிக்கில் அஷ்அரி (ரலி) அறிவிக்கிறார். (நூல்: அபூதாவுத்(ரஹ்))
மேல் பதியவாகியுள்ள ஹதிஸ்களில் ஸலாம் என்று இடம் பெற்றுள்ளது.. அதனால்அது ஸலாம் என்றால் ஸலாம் கிடையாது. மாறாக அஸ்ஸலாமு அலைக்கும் என மற்றொருவழிகளில் முழுமையான ஹதிஸ்களில் தெளிவாக வந்துள்ளது. அது ஸலாம் என்றால்
அஸ்ஸலாமு அலைக்கும் தான்.. அது தான் நபி(ஸல்)மொழியும்.
செய்திகளில் சிறந்தது, அல்லாஹ்வின் வேதமாகும் வழிகளில் சிறந்தது இந்தமுஹம்மதின் வழியாகும்.என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்கள் (இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் இப்னுமாஜா(ரஹ்))
நாம் செய்யக் கூடிய அனைத்து அமல்களும் உயிரைவிட மேலான கண்மனி நாயகம்(ஸல்)அவர்கள் சொல்லி காண்பித்து விட்டார்கள். இதற்கு இதற்கு இவ்வளவுநன்மைகளில் அளவை அறிந்தவர்களும் அவர்கள் தான் அல்லா அனைத்து இபாதத்எப்படி செய்ய வெண்டும் அதற்குரிய நன்மையின் அளவையும் சொல்லி கொடுத்துவிட்டான்.
அஸ்ஸலாமு அலைக்கு சொல்பவர் மற்றும் பதில் சொல்பவர்களின் நன்மையின் அளவு:
''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின்அருள், சாந்தி உங்களுக்கு உண்டாகட்டும்!) என்று சொன்னார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். அவர் அமர்ந்தார், நபி(ஸல்) அவர்கள்,பத்து (நன்மைகள்) என்றனர். பின்பு மற்றொருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மதுல்லாஹி என்றார் அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.அவரும் உட்கார்ந்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இருபது(நன்மைகள்) என்றார்கள். மேலும் ஒருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் பாக்கியமும்உங்கள் மீது உண்டாகட்டும்!) என்றார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில்சொன்னார்கள். அவரும் அமர்ந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் முப்பது(நன்மைகள்) என்றார்கள்"" என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி)அறிவிக்கிறார்கள். ( திர்மிதீ(ரஹ்), நஸயி(ரஹ்) மற்றும் அபூதாவுத்(ரஹ்))
அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம்அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலை)அவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)மேலும் (நபியுடைய) இதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர்கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).
அல்லா அறிவிக்காமல் நபி(ஸல்) அவர்கள் எதையும் சுயமாக அறிவிக்கவில்லைஇறைவன் புறத்திலிருந்து வந்தாலும் அது நபி(ஸல்) அவர்களின் காட்டி தந்த
முறையாக(சொல்,செயல், அங்கீகாரம்) தான் இருக்க வேண்டும், அவர் தான்உலகத்தாரின் நமது வழிகாட்டி. அவர் தான் நமது உயிர்.மேலும்இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காகஅருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லிஅவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்(33:56)
நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் எனகேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலாஇப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக்அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலிஇப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்என்னை கஅப் இப்னுஉஜ்ரா(ரலி) சந்தித்து, 'நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?' என்று கேட்டார்கள்.நான், 'ஆம், அதை எனக்கு வழங்குங்கள்" என்று பதில் சொன்னேன். உடனேஅவர்கள், 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'தங்களின் மீதும் தங்கள்குடும்பத்தார் மீதும் சலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக்கற்றுக் கொடுங்கள்) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படிஎன்று அல்லாஹ் எங்களக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கிறான்"என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீகருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார்மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும்ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் இப்ராஹீம் அவர்களின்குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல்முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப்பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா!இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப்பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும்உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம்மிக்கவனும் ஆவாய்' என்று சொல்லுங்கள்" என பதிலளித்தார்கள் என அப்துர்
ரஹ்மான்இப்னுஅபீ லைலா(ரஹ்) அறிவிக்கிறார்கள்(புகாரி(ரஹ்))
அல்லா ஸலாவத்து கூறுங்கள் என்று சொல்லும் போது நபி(ஸல்) அவர்கள் தான்விளக்கம் அளிக்க முடியும்று..இதனால் ஸலாவாத் சொல்லி என்றால் ஸலாவாத்துஎன்றாகாது.. அதற்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி கற்று கொடுத்து உள்ளார்களோஅது போல் தான் கூறமுடியும். அது போல் தான் ஸலாமும்.. நாம் நபி(ஸல்)அவர்களின் உம்மத்.. அவர்கள் எப்படி கற்று தந்தார்களோ அது போல் செய்வதுதான் நபி(ஸல்) அவர்களின் வழியை பின் பற்ற கூடியதாகும்.சகோதரரே அல்லா ஒரு செய்தியை அறிவிக்கினறான் என்றால் அதற்கு வழிக்காட்டிநபி(ஸல்) அவர்கள் தான் சொல்லி தர வேண்டும்.. அல்லா ஒரு செய்திஅறிவிக்கின்றான் என்றால் நேரடியாக அது எடுத்து செயல் படுத்த முடியாது.முகம்மது(ஸல்) அவர்களின் வழி அதை பற்றி விளக்கம் கொடுத்திற்கும் பொழுதுஅதை தான் எடுத்து செயல் பட வேண்டும்.. உதரணமாக ஈமான் கொள்ளுங்கள்,தொழுகுங்கள், நோன்பு வையுங்கள்,ஜகாத் கொடுத்து வாருங்கள், ஹஜ்செய்யுங்கள் என்று அல்லா சொல்கின்றான்.. நபி(ஸல்) அவர்களின் வழி இல்லாமல்எப்படி செய்வீர்கள், அது போல் தான் ஸலாம் அல்லா ஸலாம் கூறினான் என்றால்அதற்கு நபி(ஸல்) அவர்கள் தான் சொல்ல முடியும் எப்படி சொன்னார்கள் என்று..அதற்கு பதிலும் எப்படி சொல்ல வேண்டும் அவர்களால் மட்டுமே விளக்கம்அளிக்கமே முடியுமே தவிர உங்களுடைய சுயவிளங்கங்கள் எல்லாம் தயவு செய்துஅறிவிக்காதிர்கள்.. ஒரு குரான் விசயத்தை நேரடியாக எடுத்து கொள்ளமால் நபி(ஸல்) அவர்கள் எப்படி கற்று கொடுத்தார்களோ அது போல் தான் எடுத்து கொள்ளவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிம்க்கும், முஃமினுக்கு கட்டாய கடமையாகும்.மேலும்
தொழுது முடிந்ததும் ஸலாம் கூறுங்கள்:
நபி(ஸல்) அவர்கள் தங்களது தொழுகையில் ஸலாம் கொடுத்து முடிந்ததும்அஸ்தஃக்பிருல்லா எனக் மும்முறை கூறுபவர்களாக இருந்தனர் என தவ்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(முஸ்லிம் ஹதிஸின் சுருக்கம்)நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவோம். அப்போது நபி(ஸல்) அவர்கள்ஸலாம் கொடுக்கும்போது நாங்களும் ஸலாம் கொடுப்போம் என இத்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்ஸஜ்தா ஸஹ்வில் ஸலாம்நபி(ஸல்) அவர்கள் நடு இருப்பு (உட்காரமல்) மறதியாக எழுந்து விட்டார்கள்.
அதைக் கண்ட நபித் தோழர்களும் எழுந்துவிட்டனர். தொழுகையை முடித்துக் கொண்டு(இருப்பில் இருந்தாவாறு) ஸலாம் கூறுவார்கள் என எதிர் பார்த்தோம், ஆனால்நபி(ஸல்) அவர்கள் இருந்தாவறே ஸலாம் கூறுமுன் அல்லாஹ் அக்பர் எனக்கூறி,இரு ஸஜ்தாகளை செய்தப்பின் ஸலாம் கூறினார்கள் என அபூஹீரைரா(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.(நஸயி(ரஹ்)) அப்துல்லாபின் புஹைனா(ரலி) அவர்களின் வழியாகமுஸ்லிம்(ரஹ்), புகாரி(ரஹ்), நஸயி(ரஹ்), இப்னுமஜா(ரஹ்) ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.
நிச்சியமாக நபி(ஸல்) அவர்கள் ளுஹரை ஐந்து ரக்கத் தொழவைத்துவிட்டார்கள்,இருந்தவர்கள் நீங்கள் ஐந்து ரக்கத் தொழுதுவிட்டனர்எனக் கூறினார்கள், அதனைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் இருந்தாவாரே ஸலாமுக்குபிறகு இரு ஸஜ்தாக்களை செய்தனர். என அப்துல்லாபின் மஸ்வூத்(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்,(திர்மதி(ரஹ்))
மேலும் கவனிக்க வேண்டியவைமேல் உள்ள நபி மொழி வெளிப்படையாக ஸலாம் என்று வந்துள்ளது , அதனால்நீங்கள் ஸலாம் என்று சொல்லி வலப்பக்கமும், இடப்பக்கமும்திரும்புவீர்களா, சிந்தியுங்கள் அருமை சகோதரர்களே!
தொழுகையில் இருப்பில் ஸலாம் எவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கற்றுகொடுத்தார்கள்:
நபி(ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மத்துல்லா எனக் கூறி வலப்புறமும்,இடது புறமும் ஸலாம் கொடுப்பவர்களாகஇருந்தார்கள் என அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி)அறிவிக்கிறார்கள்.நபி(ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனக் கூறி வலப்பக்கம் ஸலாம் கூறுகின்ற பொழுது அவர்களின் வலப்பக்கம் வெண்மையாககாணப்படும் அளவிற்கு திரும்புவார்கள். இடப்பக்கம் கூறி ஸலாம் கூறுகின்றபோது இடது கண்ணத்தின் வெண்மை காணப்படும் அளவிற்கு திரும்புவார்கள் எனஇப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இது போன்றே அப்துல்லா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.(அபுதாவுது(ரஹ்), நஸயி(ரஹ்))
நபி(ஸல்) அவர்கள் அவரது தொடையின் மீது வைத்து கொண்டு அவரது சகோதரருக்குஅவரது வலது பக்கத்திலும்,இடது பக்கத்திலும் அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மத்துல்லா எனக்கூறி ஸலாம் கூறுவது அவருக்கு போதாதா எனக் கூறினார்கள்என ஜாபிர் பின் ஸமுரா(ரலி) அறிவிக்கிறார்கள் ( அபுதாவுத்(ரஹ்),நஸயி(ரஹ்))
நபி(ஸல்) அவர்கள் தங்களது தொழுகையில் ஸலாம் கொடுத்து முடிந்ததும்
அஸ்தஃக்பிருல்லா எனக் மும்முறை கூறுபவர்களாக இருந்தனர் என தவ்பான்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்(முஸ்லிம்(ரஹ்) ஹதிஸின் சுருக்கம்)
மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தியுடன் வந்து'ஸலாம்' என்றார்கள். (அவரும்) "ஸலாம்" என்றார் (அதன் பின்னர் அவர்கள்உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில்தாமதிக்கவில்லை. 11:69 - 51:25
நபி(ஸல்) அவர்களின் விளக்கம்:
அல்லா எவ்வாறு ஸலாம் கூறினான்.வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் எப்படிஸலாத்தை எடுத்துரைத்தார்கள்:
ஒரு முறை வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்குவருகை தந்த போது, நபி(ஸல்) அவர்களுடைய அன்பு மனைவி கதீஜா(ரலி) அவர்கள்அங்கு இருந்தார்கள்.ஜிப்ரீல்(அலை) அவர்கள், "அல்லாஹ் கதீஜா(ரலி)அவர்களுக்கு ஸலாம் அனுப்பியுள்ளான்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள், "ஓ! கதீஜாவே, அல்லாஹ் உமக்கு ஸலாம்(கூறி)அனுப்பியுள்ளான்". அதற்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் கூறினார்கள்:"அல்லாஹ்வே 'அஸ் ஸலாம்' ஆவான். மேலும் உங்கள் மீதும் (ஜிப்ரீல்(அலை))ஸலாம்(சாந்தி) உண்டாகட்டும்); மேலும் அல்லாஹ்வின் தூதரே, தங்கள் மீதும்ஸலாம் (சாந்தி) உண்டாகட்டும்". (ஹதீஸ்: புகாரி(ரஹ்))அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களி மண்ணிலிருந்து)படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு,நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள்உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான்உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான்.அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும்– உங்களின் மீது சாந்தி பொழியட்டும்” என்று கூறினார்கள். அதற்குவானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்” என்றுபதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாககூறினார்கள். எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும்
ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின்காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்)குறைந்து கொண்டே வருகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனஅபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்(புஹாரி(ரஹ்),முஸ்லிம்(ரஹ்))மேல் உள்ள நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் அல்லாவும் அஸ்ஸலாமு அலைக்கும்என்று தான் கூறியுள்ளான் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம்அளித்துவிட்டார்கள்.. இதை விட தெளிவான ஒரு ஆதாரம் வேண்டுமா சொல்லுங்கள்சகோதரர்களே!!
மேலும் பதில் எவ்வாறு பதில் கூற வேண்டும் எனவும் ஹதிஸ்களில்காணமுடிகிறது.. அல்லாவுக்கு ஆயிசா(ரலி) அவர்கள் எப்படி பதில்அளித்தார்கள் என்பதையும் உற்று கவனியுங்கள்.(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆயிஷா! இதோ (வானவர்)ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்' என்றார்கள். நான், 'வ அலைஹிஸ் ஸலாம்வ ரஹ்மத்துல்லாஹி' (அவரின் மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும்பொழியட்டும்) என்று (பதில் சலாம்) சொல்லிவிட்டு, 'நாங்கள்பார்க்காதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்)அவர்களிடம் சொன்னேன். ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.மற்றோர் அறிவிப்பில், 'வ பரகாத்துஹு' (இறைவன் வழங்கும் சுபிட்சமும்)என்று (கூடுதலாக) ஆயிஷா(ரலி) கூறினார் எனக் காணப்படுகிறது.இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.(புகாரி(ரஹ்))
இதில் ஸலாம் உரைக்கிரார்கள் என்று இடம் பெற்றுள்ளது. அது எப்படிகூறினார்கள் என ஆதம் (அலை)அவர்களின் வழியாக நாம் பார்த்தோம். இப்பொழுதுஜிப்ரில்(அலை) அவர்களுக்கு ஆயிசா(ரலி) அவர்கள் பதிலுக்கு ஸலாம் என்றுகூறவில்லை. 'வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி' என்றே பதிலுரைத்தார்கள்.அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்! வஇன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்கும் அல்ஆஃபியா(முஸ்லிம்(ரஹ்))

மலையும், மரங்களும் ஸலாம் எவ்வாறு கூறுகின்றது:
நான் ஒரு மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தேன். மலையும் மரங்களும்அல்லாஹ்வின் தூதரே(ஸல்) அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூரின.அறிவிப்பவர்:அனஸ்(ரலி) நூல்:முஸ்லிம்(ரஹ்)

மேலும் ஸலாத்திற்கான விளக்கங்கள்..
சகாபாக்கள்(ரலி) எவ்வாறுஅல்லாவுக்கும் வானவர்களுக்கும் ஸலாம் எவ்வாறு கூறினார்கள்:
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும்போது'அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலாமீகாயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்' (அடியார்களுக்கு முன்அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல் மீது சாந்திஉண்டாகட்டும். இன்னார் இன்னார் மீது சாந்தி உண்டாகட்டும்) என்றகூறிவந்தோம். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித்திரும்பி, 'நிச்சயமாக அல்லாஹ்வே 'ஸலாம்' (சாந்தியளிப்பவன்) ஆகஇருக்கிறான். எனவே, உங்களில் ஒருவர் தொழுகையின் இருப்பில்இருக்கும்போது 'அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்துஅஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமுஅலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன' (சொல், செயல், பொருள் சார்ந்தஎல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன.நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும்ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும்சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம்மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினார்கள் எனஅமையும். 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றுநான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகிறேன்) என்றும்கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்'என்றார்கள்.அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்கள் (புகாரி(ரஹ்))
அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்களின் அல்லாவின் தூதருக்கு கூறும் ஸலாம்முறை:
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) ‘அஸ்ஸலாமு அலைக்க யாரஸுலுல்லாஹ்! அஸ்ஸலாமுஅலைக்க யாஅபா பக்ர் அஸ்ஸலாமு அலைக்க யாஅபீ என்று கூறிவிட்டு உடனேதிரும்பி விடுவார்கள். (மாலிக் முஆத்தா(ரஹ்))
நபி(ஸல்) அவர்களின் கடித்தத்தில் ஸலாம் எவ்வாறு இருந்தது:
அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.நான் ஷாம் நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றிருந்த குறைஷியர்சிலருடன் இருந்தபோது (அந்நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்துவரும்படி ஆளனுப்பினார். எனவே, அவரிடம் நாங்கள் சென்றோம். பிறகு, அவர்இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச் சொன்னார். அப்போதுஅது வாசிக்கப்பட்டது. அதில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன்அல்லாஹ்வின் பெயரால்...) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமானமுஹம்மத் ரோம பைஸாந்திய மன்னர் ஹெராக்ளியஸிற்கு எழுதிக் கொண்டது.அஸ்ஸலாமு அலா மனித் தபஅல் ஹுதா. (நேர்வழியைப் பின்தொடர்ந்தோருக்குச்சாந்தி உண்டாகட்டும்.) பின்னர்...இதன்மூலம் மாற்றுமதத்வருக்கும் கடித்தத்தில் அஸ்ஸலாம் அலைக்கும்கூறுலாம்,ஆனால் வேதகொடுக்கப்பட்டவர் ஸலாம் கூறினால் பதில் வா அலைக்கும் என்றேகூறுங்கள்..
கப்ருக்குள் இருப்பவர்களை நோக்கி ஸலாம் கூறூம் முறை பற்றி நபி(ஸல்)அவர்களின் கற்றிகொடுத்தவிதம்:
முஸ்லிம், மூமின்களான கப்றுவாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ்நாங்களும் உங்களை வந்தடைகிறோம். எங்களையும், உங்களையும் அல்லாஹ்மன்னித்தருள்வானாக! எங்களுடையவும், உங்களுடையவும் நம் எல்லோரின்பிழைகளைப் பொறுத்தருள அவனைப் பிரார்த்திக்கிறோம். இறைவா! இவர்களுடையகூலிகளை நீ இல்லாமலாக்கி விடாதே! இவர்களுக்குப் பிறகு நீ எங்களைபித்னாவில் ஆழ்த்தி விடாதே! எங்களையும், இவர்களையும் நீமன்னித்தருள்வாயாக!
இறுதியாக அல்லாவும், நபி(ஸல்) அவர்களும் மிஃராஜ் இரவில் பேசி கொள்ளும்போது அல்லாவும், நபி(ஸல்) அவர்களும் ஸலாத்தை எவ்வாறு கூறினார்கள்:
இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில்,குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின்இருப்பில் ஓதப்படும்) தஷஹ்ஹு(த் எனும் அத்தஹிய்யாத்)தை எனக்கு அவர்கள்கற்றுத்தந்தார்கள். (அது பின்வருமாறு:) அத்தஹிய்யாத்து லில்லாஹி
வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யுவரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ்ஸாலிஹீன்; அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரசூலுஹு (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும்அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின்அருளும் சுபிட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின்நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும்,முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும்இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்).நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே (உயிரோடு) இருந்தவரை இவ்வாறு ('அஸ்ஸலாமுஅலைக்க அய்யுஹந் நபிய்யு' - நபியே உங்களின் மீது சாந்தி நிலவட்டும் என்றுமுன்னிலைப்படுத்தி) சொல்லிவந்தோம். அவர்கள் (உயிர்)கைப்பற்றப்பட்டபோது நாங்கள் 'அஸ்ஸலாமு அலந் நபிய்யி' (நபி(ஸல்)அவர்களின் மீது சாந்தி நிலவட்டும்) என்று (படர்க்கையாகக்) கூறலானோம்.

அல்லா மட்டும் அனைத்தும் அறிந்தவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக