வியாழன், 23 ஆகஸ்ட், 2012

பன்றியும்,பன்றியில் உள்ள எந்த பாகமும் வியாபரத்திற்கு கூடாது


அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு,

நபி(ஸல்) அவர்கள் வியாபரம் தடை செய்த ஒன்றை அதை கூடும் என பத்வா கொடுக்கிறார்கள், ஹதிஸை பற்றி எந்த ஞானமும்  இல்லாமல் எல்லாம் தெரிந்தது போல் மார்க்கத்தில் இல்லாதத்தை புகுத்தியுள்ளார்கள்.இவர்களின் முனாபிக் தனத்தை இன்னும் ததஜ அறியாமல் மூடர்களாக உள்ளார்கள்,


நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள் (இமாம் புஹாரி(ரஹ்)

இதில் தெள்ள தெளிவாக பன்றியை வியாபரம் செய்யக் கூடாது என தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் முனாபிக் பிஜே, பன்றியின் தோல் வியாபரம் செய்யலாம் எனப் பத்வா வழங்கியுள்ளான், அதுவும்  சரி என நம்பும் அவர்களின் கண்மூடித்தனமான கூட்டம்,

பன்றியே வியாபரம் செய்ய தடுக்கப்பட்டிருக்கும் போது பன்றியுள்ள தோல் மட்டும் எவ்வாறு வியாபரம் செய்ய முடியும்.பன்றி உள்ள எதையும் விற்பனை செய்யக் கூடாது எனத் தெளிவாக கூறப்பட்ட பின்னர் ஆனால் முனாபிக் பீஜே அதை வியாபரம் செய்யலாம் என்பது எந்த வகையில் நியாயம்,அறிவுடையோருக்கு விடை கிடைக்கும்

ஆனால் முனாபிக் பீஜே கீழே

அன்று:

பீஜேவே, பன்றியும்,பன்றியில் உள்ள எல்லா பாகமும் ஹராம் எனக் கூறும் வீடியோவை கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து பார்க்கவும், பார்க்கவும் வீடியோ நேரம் 5:10 வினாடிகளிலிருந்து....


http://www.youtube.com/watch?v=B7pYaA1w5MU

இன்று:


தற்போது அறிவீர்கள் பீஜே ஒரு மாபெரும் பொய்யன் என்று


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அஹ்மது (1797)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பதனிடப்பட்டுவிட்டால்
தூய்மை அடைந்துவிடும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (596)

நமது பதில்:

இதறகு முன் உள்ள ஹதிஸை மறுத்து வெளியிட்டுள்ளார்கள்,,நபி(ஸல்) அவர்கள் செத்த ஆடுக்கு விதிவிலக்கு கொடுத்தார்கள், கிழே உள்ள ஹதிஸை தெளிவாக படித்திற்கள் என்றால் உங்களுக்கு நன்றாக புரியும், எப்படி மார்க்கத்தில் விளையாடுகின்றார்கள் என்பதை கண்டறியுங்கள்.

(என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குரிய ஆடு ஒன்று
(செத்துவிட்டது. அது) கிடந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து
சென்றார்கள். அப்போது நீங்கள் இதன் தோலால் பயனைடயக் கூடாதா? என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்,இமாம் புஹாரி(ரஹ்))

 மேல் உள்ள இந்த ஹதிஸை மறைத்து அதற்கு பின் உள்ள  ஹதிஸின் பகுதியை மட்டும் மறைத்து கூறியுள்ளார்கள். இது இவர்களுக்கு புதியதல்ல


மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:

பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : பைஹகீ (64) பாடம் (தூய்மை)

நமது பதில்:

இதில் எல்லா என்ற வார்த்தை வந்துள்ளதால் அது பன்றியும் பொருந்தும் எனக் கூறுகின்றார்கள், அதனால் அது வியாபரம் செய்யலாம் எனக் கூறும் சொல், இது இவர்களின் அறியாமை வாதம் ஆகும்.

இதற்கு ஒரு உதாரணம் சொன்ன உங்களுக்கு நன்றாக புரியும்,

நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாவை திக்ரு செய்பவர்களாக இருந்தார்கள் என ஆயிசா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்( இமாம் முஸ்லிம்(ரஹ்)).

இதில் வெளிப்படையாக பார்க்கும் போது நபி(ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் திக்ரு செய்வார்கள் எனப் பொருள் கிடைக்கும் ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உண்டு அது தூய்மையான நிலையில் தவிர வேறெந்த நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்வதை நான் வெறுக்கிறேன் என மற்றொரு வழியில் நிருபிக்கப்பட்டுள்ளது

சிறு நீர் கழித்து கொண்டு இருக்கும் போது நபி(ஸல்) அவர்களுக்கு, முஜாஹிர் பின் குன்ஃபுது(ரலி) அவர்கள் ஸலாம் சொன்னார்கள், அதற்கு நபியவர்கள் மறுமொழி கூறவில்லை, பிறகு உளு செய்து விட்டு மறு மொழி கூறினார்கள்.

தூய்மையான நிலையில் தவிர (வேறு எந்த நிலைகளிலும்) அல்லாவை திக்ர் செய்வதை நான் வெறுக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஹாஜிர் பின் குன்புத்(ரலி) அறிவிக்கிறார்கள்,
இமாம் அபுதாவுத்(ரஹ்)(16),இமாம் இப்னுமஜா(ரஹ்)(344),இமாம் நஸயி(ரஹ்) (38),இமாம் முஸ்னத் அஹ்மது(ரஹ்)(18259,19833), இமாம் தாரமீ(ரஹ்) (2527) இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்),இமாம் பைஹகி(ரஹ்),இமாம் ஹாகிம்(ரஹ்).

இமாம் ஸிந்தி(ரஹ்) அவர்களின் விளக்கம்:

ஸலாம் கூறுவதற்கு உளு தேவையில்லை என்றாலும், ஸலாம் என்பது அல்லாவின் பெயர்களும் ஒன்றாக இருப்பதால் தூய்மை அடைந்த நிலையில் பதில் சொன்னார்கள்.

இதிலிருந்து,

எல்லா நிலை என்பது நபி(ஸல்)  அவர்கள் எல்லா நிலையில் திக்ரு செய்வார்கள் ஆனால் அவர்கள் தூய்மையான நிலையில் இருப்பார்கள்,

அதே போல் இதில் எல்லா தோல் எனக் கூறப்பட்டாலும் அது பன்றியை தோல் தவிர, ஏனென்றால் ஹரமான  பன்றியை விற்பனைச் செய்யகூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள போது பன்றித் தோல் மட்டும் எவ்வாறு வியாபரம் செய்ய முடியும். பன்றித் தோல், பன்றியில் இல்லை எனக் கூறமுடியமா? அது எவ்வாறு வியாபரத்திற்கு பொருந்தும்.

எனவே பன்றியும், பன்றித்தோலும், பன்றியில் உள்ள எந்த பாகமும் வியாபரத்திற்கு கூடாது


விமர்ச்சனமும் விளக்கமும்:

பன்றி - மறுபடியும் நியாபடுத்த முயலும் விதாண்டாவதமும் அதற்கு தக்க நமது பதில்களும்:


மேல் உள்ள வீடியோவை அனுப்பி, மறுபடியும் பன்றியில் தோல், பன்றியின் இதயம், பன்றியின் இரத்தம் ஹலால் என தறுதலை  பீஜே வின் கும்பல் அனுப்பி இருந்தது: 

http://www.youtube.com/watch?v=qiXx9fmMc3U

அதற்கு நமது பதில்:

நீங்கள் பதித்த வீடியோவில் 5:36-ல் பன்றி எல்லாம் ஹராம் என்று சொல்லும் போது பன்றித்தோல்,பன்றி இரத்தம்,பன்றி இதயம்  மட்டும் எப்படி ஹலால் ஆகும் ,மேலும் நீங்களே நன்றாக வீடியோவைப் பார் யார் பொய் சொல்கிறார், சும்மா அவசரப் பட்டு கத்தாதே, இது உன் பீஜேவின் மத்ஹப் வெறி மற்றும் உன் உன் வாய்ச் சாடல் மேலும் நான் பதித்த ஆதாரத்தை உறுதிபடுத்துக்கின்றது. மேலும் வீடியோவில் பன்றி இரத்தம் ஹலால் பார்க்க 7:38-ல் பன்றியின் இரத்தம் ஹலால் சொல்லும் காட்சியையும், அடுத்து பன்றியின் இதயம் ஹலால் என்று சொல்லும் காட்சி வீடியோ 11.00-ல் காட்சியையும் பதிவு செய்யப்பட்டுள்ளது,

பீஜே, பன்றியில் எல்லாமே ஹராம் என்று சொல்லி, மற்றொரு இடத்தில் பன்றியின் இதயம், ரத்தம், தோல் ஹலால் என்று சொல்வதை அவரின் அறியாமையை வெளிப்படுத்தி உள்ளது, 

மேலும் மேலுள்ளவற்றில் வீடியோவிலிருந்து பீஜே கூறியதவது, அல்லாஹ் தனது திருமறையில், பன்றியின் இறைச்சிமட்டும் ஹராம் என்று சொல்லியுள்ளான், அதனால் பன்றியை பண்ணையில் வளர்கலாம், மேலும் அதன் இரத்தம், இதயம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவே அது உயிர்காக்க உதவும் என கப்ஸாவை அளந்து விட்டுள்ளார்,  சரி விசயத்திற்கு வருவோம்...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த இறைவன்மீது சத்தியமாக! விரைவில் (உலகஅழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா (அலை) உங்களுடைய நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால்அதை வாங்கிக் கொள்ள எவரும் இருக்கமாட்டார்.இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் புஹாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்), இமாம் அபூதாவுத்(ரஹ்),இமாம் மஜா(ரஹ்),போன்ற பல இமாம்கள் இந்த ஹதிஸை பதிவு செய்துள்ளார்கள்

பன்றி  உயிர்காக்க உதவும்  சொல்லும் பீஜே, அதை வளர்கலாம் என்று சொல்லும் பீஜே ஆனால் நபி(ஸல்) அவர்களுக்கும் மாற்றமாக சொல்லி உள்ளார், என்பது உங்களுக்கு ஏன் தெரியுமல் உள்ளது?. அதை உயிர்காக்க வைத்துள்ளான் என்றால் உயிர்காக்க உதவும் ஒன்றை ஏன் ஈஸா(அலை) அவர்கள் கொல்ல வேண்டும், அல்லாஹ் ஏன் ஈஸா(அலை) அவர்களின் மூலமாக கொல்ல ஏற்பாடு செய்துள்ளான், அதன் இதயத்தின் மூலம், அதன் இரத்தத்தின் மூலம் பயன் இருக்கும் என்று பீஜே கூறும் போது ஏன் அதை ஈஸா(அலை) அவர்கள் கொல்ல வேண்டும், பீஜே  போன்ற பெரும் பொய்யர்கள் இவ்வாறு சொல்லிவீர்கள் என்று தெரிந்து தான் அல்லாஹ், அதை ஈஸா(அலை) அவர்கள் மூலம் கொல்ல செய்து உள்ளான். பீஜே மறைமுகமான விசயத்தை அறிந்தவரா என்ன? 
ஈஸா(அலை) அவர்கள் பன்றியை கொல்ல மாட்டார்கள், அது பிஜேவாகிய எனக்கு வஹி வந்துவிட்டது என்பது போல், அதனால் அதை பண்ணையில் வளர்கலாம் என கண்மூடித்தனமாக பத்வா வழங்கி உள்ளார். அதையும் சரி என்று தலை ஆட்டிக்கிறீர்கள், யார் ஹதிஸை பின்பற்றுகிறோம் என்று வாய் அளவில் சொன்னால் போதாது, அதை அமல் படுத்த வேண்டும், தற்போது நீங்கள் பீஜே பின்பற்றுகிறீர்கள் தவிர, அல்லாவையும் அவன் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களையும், நீங்களும் உங்கள் அமைப்பை சேர்ந்தவர்களும் பின்பற்ற வில்லை நன்றாக அறிய முடிகிறது. நீங்கள் தான் பீஜே வின் மத்ஹப் பின்பற்றுகின்றீர்கள் என்பது உறுதியாகின்றது.

மேலும் பன்றியின் இரத்தம் தூய்மையானவையா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,பகைடக்காய் ஆட்டம் விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரை போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்))

பன்றியின் இறைச்சியை மட்டும் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை, பன்றியின் இரத்தத்தையும் சேர்த்து கூறியுள்ளார்கள், அதை போய் உடலுக்குள் ஏற்றலாம் என்று சொல்பவனை என்ன என்று கூறுவது? நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு பன்றி இறைச்சியும், பன்றி இரத்தமும் அசுத்தம் என்று சொன்னால் இவ்வாறு கூறி இருப்பார்கள்.

இந்த ஹதிஸிற்கு இமாம்கள் விளக்கம் கொடுக்கும் போது, பன்றி ஒரு அசுத்தமான விலங்கு,  முஸ்லிம் அதன் எந்த பொருளையும், பாகத்தையும் பயன்படுத்த கூடாது, அதன் இறைச்சியை தொடவும் கூடாது, உண்ணவும் கூடாது மற்றும் அதன் இரத்தமும் மிகவும் அசுத்தமானது, அதனையும் தொடவும் கூடாது.



2 கருத்துகள்:

  1. பன்றித்தோல் ஆகுமானது என அபூயூசுப் என்ற இமாம் கூறுகிறார் என பீஜே கூறுகிறார் அதற்கு உங்களின் பதில் என்ன?

    பதிலளிநீக்கு
  2. சகோதரரே,

    பீஜே செய்த பித்தலாட்டங்களில் இதுவும் ஒன்று, எப்போதும் எந்த ஒரு செய்தி பீஜே சொன்னாலும் அதில் பொய் இருக்கிறதா அல்லது உண்மை இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும் அதற்கு பிறகு தான் முடிவு எடுக்க வேண்டும், இங்கும் சகோதரர் பீஜே பித்தலாட்டத்தை செய்து இருக்கிறார்,

    இமாம் அபுஹனிபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், பன்றித்தோலும் மற்றும் மனிதன் தோலும் பயன்படுத்துவது ஹராம் என்று கூறியுள்ளார்கள்(ஹிதயா பாகம் 1 பக்கம் 11)

    இமாம் ஷாபி(ரஹ்) அவர்களும் இமாம் அபுஹனிபா(ரஹ்) அவர்களும் இமாம் அபூயூசுப்(ரஹ்) கூறுகிறார்கள் பன்றித்தோலை சுத்தப்படுத்தமுடியாது மேலும் அது அசுத்தமானது அது ஹராம் அதனால் பன்றித்தோலைப் பயன்படுத்தக்கூடாது(இமாம் நவவி(ரஹ் 3/145)

    இமாம் அபூயூசுப்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், பன்றி சுத்தமாகதத்திற்கு காரணம் பதனிடப்படக்கூடிய செயல் அது சுத்தமாக்காது மேலும் பன்றி அசுத்தமானது, பன்றித்தோலும் அசுத்தமானது, அதை சுத்தமாக்க முடியாது(அல் மவ்ஸா பிக்ஹ் 20/34)

    பதிலளிநீக்கு