சனி, 22 ஜனவரி, 2011

சகபாக்களை குறைகூறுபவர்கள், அல்லாவை அஞ்சி கொள்ளட்டும்

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம் சகோதரகளுக்கும்,


என் தோழர்களைத் திட்டாதீர்கள்(ஏசாதீர்கள், குறைகூறாதீர்கள்), ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(இமாம் புகாரி(ரஹ்)).

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:தமத்து ஹஜ்ஜை ரசூல் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்றிருக்கும்போது, அதை அறிந்திருக்காத உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர், அதை மறுத்திருக்கிறார்கள். (புஹாரி 1563 )

நான் உஸ்மான்(ரலி) உடனும், அலீ(ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (ம்ரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார். இதைக்கண்ட அலீ(ரலி), ஹஜ் உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து 'லப்பைக் பி உம்ரதின் வ ஹஜ்ஜதின்" என்று கூறிவிட்டு 'நபி(ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான்விட்டு விடமாட்டேன்" எனக் கூறினார்கள் என மர்வான் இப்னி ஹகம் அறிவித்தார்கள்.

பதில்:

உஸ்மான்(ரலி) அவர்கள் சுயமாக செய்தார்களா?


நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி),உஸ்மான்(ரலி) ஆகியோரும் ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் அணிந்தார்கள் இதை இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் திர்மதி(ரஹ்),இமாம் புகாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்).


அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்)
வந்தார்கள்.

பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தேபாது, முதல் வேலையாக இறையில்லம்கஅபாவைச் சுற்றிவந்தார்கள். பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல்,ஹஜ்ஜோடு உம்ராவை சேர்த்தல் வேறதுவும் நிகழவில்லை). 

பின்னர் உமர்(ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தேபாது,அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்ததை போன்றே செய்தார்கள்

பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்கள் (மக்காவிற்கு 
வந்ததும்) முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றி வருவைதேய நான் கண்டேன்; 


பின்னர் அதை தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவை சேர்த்தல் வேறதுவும் நிகழவில்லை)

பின்னர் முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோரும் (அவ்வாறே செய்தனர்.) பின்னர் என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். 


அவர்களின் முதல் வேலையாக இருந்ததும் கஅபாவைச் சுற்றுவதாகத்
தான் இருந்தது. அதை தவிர வேரொன்ன்றும் நடக்க வில்லை. பின்னர் முஹாஜிர்களும் அன்சாரிகளும் அவ்வாறு செய்ய்வைதேய நான் கண்டேன்; பின்னர் அதத் தவிர வேரெதுவும் நிகழவில்லை.பின்னர் அவ்வாறு செய்தவர்களில் இறுதியானவராக இப்னு உமர் (ரலி) அவர்கைளேய நான்
கண்டேன். அவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றவில்லை. இதோ அவர்களுடன் இப்னுஉமர் (ரலி) அவர்கேள இருக்கிறார்கள். அவர்களிடேம மக்கள் கேட்கவேண்டியதுதானே!முன்னோர்களில் எவரும் தம் பாதங்கைள (மக்காவில்) பதித்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவை சுற்றிவராமல் இருந்ததில்லை. பின்னர் (ஹஜ்ஜை முடிக்காமல்)

இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டார்கள். என் தாயார் (அஸ்மா-ரலி), என் சிறிய தாயார்(ஆயிஷா-ரலி) ஆகியோர்(மக்காவிற்கு) வந்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் வேறெதையும் தொடங்கமாட்டார்கள். பின்னர் (ஹஜ்ஜை முடிக்கும்வைர) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.என் தாயார் (அஸ்மா-ரலி) அவர்கள் என்னிடம், "நானும் என் சேகாதரி (ஆயிஷா-ரலி) அவர்களும் (உன் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களும் மற்றும் இன்னின்ன மனிதரும் உம்ராவிற்குச் சென்ன்றேபாது ஹஜருல் அஸ்வைதத் தொட்டதும் (அதாவது தவாஃபும்"சயீ'யும் செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம்'' என்று தெரிவித்தார்கள். (எனேவ இராக்கைச் செர்ந்த) அந்த மனிதர் பொய்யான தகவலையே குறிப்பிட்டுள்ளார்'' என்று உர்வா (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள். (இமாம் முஸ்லிம்(ரஹ்))


எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார் என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் புகாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்)).

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:உடலுறவு கொண்டு, இந்திரியம் வெளியாகா விட்டாலும் குளிப்பு கடமை என்று ரசூல் (ஸல்) கட்டளையிட்டிருக்க, உஸ்மான் (ரலி) அவர்கள் குளிப்பு கடமையில்லை என்று கூறியிருக்கிறார்கள். (புஹாரி 179 )

பதில்:
ஆரம்ப சட்டம்:

விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கொடுக்கப்பட்ட சலுகையாக இருந்தது. பின்னர் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு(ஆணுறுப்பும்,பெண்ணுறுப்பும் இணைந்து விந்து வெளிப்படாவிட்டாலும் குளிப்பது அவசிக்கப்பட்டு) விட்டது. என உபை பின் கஅபு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உஸ்மான்(ரலி,அலி(ரலி), ஆரம்ப காலத்தில் சலுகை அளிக்கப்பட்ட ஹதிஸ், அதுவும் அவர்கள் சுயமாக அறிவிக்கவில்லை,

உஸ்மான்(ரலி), அலி(ரலி), ஆகியோர் அறிவிக்கிறார்கள், விந்து வெளிப்பட்டாலே குளிப்பது அவசியம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹதிஸ் சட்டம் மாற்றப்பட்டப்பின் உஸ்மான்(ரலி), அலி(ரலி), அறிவிக்கும் ஹதிஸ்:
பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதை ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இது ஹசன், ஸஹிஹ் எனும் தரத்தலைமைந்தாகும், ஆயிசா(ரலி) அவர்கள் பல்வேறு வழிகளில் இந்த ஹதிஸ் அறிவிக்கப்படுகிறது.(அவர்கள்) அபூபக்கர்(ரலி),உமர்(ரலி),உஸ்மான்(ரலி),அலி(ரலி), போன்ற நபித்தோழர்களில் பலரது கருத்தும், தாபியின்களில் உள்ள சட்ட நிபுனர்களின் கருத்தும் ஸுஃப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்),ஷாஃபி(ரஹ்),அஹ்மத்(ரஹ்),இஸ்ஹாக்(ரஹ்) போன்றவர்களின் கருத்து இதுவேயாகும், பெண்ணுறுப்பை, ஆணுறுப்பு கடந்துவிட்டால்(விந்து வெளிப்பட்டா விட்டாலும்) குளிப்பு கடமை என்று இவர்கள் கூறுகின்றார்கள்.
(இமாம் முஸ்லிம்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் நஸயி(ரஹ்),இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்))

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மூன்று தலாக்கை ஒரே நேரத்தில் சொன்னாலும், அது ஒரு தலாக்கென்று தான் கருதப்பட்டு வந்தது. ஆனால், உமர் (ரலி) இந்த சட்டத்தை மாற்றுகிறார்கள். (இதில் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் மாற்றுகிறார்கள் என்றே வருகிறது!) - முஸ்லிம் 2689

பதில்:
என் அருமை தோழர்களே நான் எவ்வளவு நாட்கள் நான் உங்களுடன் இருக்க போகிறேன் என்பது எனக்கு தெரியாது, எனக்கு பிறகு அபூபக்கர்(ரலி) அவர்களையும், உமர்(ரலி) அவர்களையும் பின்பற்றுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினதாக ஹூதைபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் மிஷ்காத்(ரஹ்),இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் திர்மதி(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்)).

எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார் என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(இமாம் அஹ்மத்(ரஹ்),இமாம் இப்னுமஜா(ரஹ்),இமாம் புகாரி(ரஹ்),இமாம் முஸ்லிம்(ரஹ்)).

மறுப்பவர்கள் வைக்கும் ஆதாரம்:
தொழுகையின் போது ருகூவில் கால் முட்டிகளில் கை வைக்க வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கும் போது, அதற்க்கு மாற்றமாக, இப்னு மசூத் (ரலி) அவர்களுக்கு தெரியாமல், தமத்து இரு தொடைகளுக்கு நடுவே கை வைத்து தொழுகிறார்கள். (முஸ்லிம் 831 )

பதில்:

குர் ஆன் இறங்கிய முறைப்படியே ஓத வேண்டுமென உங்களில் ஒருவர் விரும்பினால் அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் முறைப்படி ஓதிக்கொள்ளவும், அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் உங்களுக்கு எந்த ஒரு ஹதிஸை அறிவித்தாலும் அதனை உண்மை என நம்புங்கள் என நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். மேலும் நான் ஓராண்டு காலம் வரை ஒவ்வொரு வியாழன் கிழமை அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து கொண்டு இருந்தேன், அக்காலத்தில் ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த விசயத்தையும் கூற நான் கேட்டதில்லை, ஒரு தடவை (அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி)) அவர்கள் கூறினார்கள் என்று தானாக நாவில் வந்தவுடன்,உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது,கண்களில் கண்ணீர் ததும்பியது, நெற்றில் வியர்வை துளிர்த்தது, நரம்புகள் புடைத்து கொண்டன, பிறகு அவர்கள் இன்சா அல்லா இவ்வாறு தான் கூறினார்கள் அல்லது இதை போன்றதை கூறினார்கள் அல்லது இதைவிட அதிகமாக அல்லது இதைவிட சற்று குறைவாக கூறினார்கள் என்று கூறி முடித்தார்கள்(இமாம் அஹ்மத்(ரஹ்).


அல்லா மிக்க அறிந்தவன்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு காலம் வரும் நன்கு பசிதிருப்பவன் உணவை கண்டவுடன் அதை நோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் சமுதாயத்தை நோக்கி மற்றவர்கள் பாயவார்கள்.

அதற்கு பிறகு நபி தோழர் வினவினார்கள்: அல்லாவின் தூதரே அப்பொழுது முஸ்லிம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரை போல் ஆகிவிடுவார்கள்.அவர்கள் உள்ளத்தில் வஹ்ன் வந்து விடும்.

அதற்கு பிறகு நபி தோழர் வினவினார்கள்: அல்லாவின் தூதரே வஹ்ன் என்றால் என்ன்?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: இவ்வுலகத்தின் மீது அதிக பற்றும் மரணத்தை அஞ்சுவது ஆகும்

நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டமாக பிரிவர், அதில் ஒரே ஒரு கூட்டத்தை தவிர மற்ற அனைவரும் நரகத்திற்கு செல்வர் இதை செவியுற்ற நபி தோழர் அல்லாவின் தூதரே! அந்த சுவனத்திற்கு செல்லும் அந்த கூட்டம் எது?

அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்: அந்த கூட்டம் நானும் என்னுடைய தோழர்களையும் பின்பற்றிய கூட்டம் ஆகும். (இமாம் திர்மதி(ரஹ்))


நபி(ஸல்) அவர்கள் எது சொன்னாலும் பின்பற்றுவோம்:

அவர்(நபி(ஸல்)) தம் இச்சைபடி எதையும் பேசுவதில்லை.அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட்தேயன்றி வேறில்லை.மிக்க வல்லமுடையவர் ஜிப்ரில்(அலை) அவர்களிக்கு கற்று கொடுத்தார்கள்(53:3,4,5)

மேலும் (நபியுடைய) இதயம் கண்டதை பற்றி பொய்யுரைக்கவில்லை ஆயினும் அவர் கண்டவற்றின் மீது நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?(53:11,12).

அல்லா திருமறையில் நபி(ஸல்) அவர்களுக்கு வழிப்பட்டவர், அல்லாவுக்கு வழிபட்டவரவார்:
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்கள் கொண்டு நினையூட்டப்பட்டால் செவிடர்களையும், குருடர்களையும் போன்று அதில் மீது விழமாட்டார்கள்(25:73)

நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாவுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிங்குள்(8:1)

முஃமீன்களே! நீங்கள் அல்லாவுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் செவிமடுத்து கொண்டே அவரை புறக்கணிக்காதிர்கள்(8:20)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாவுக்கும் வழிபடுங்கள், இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள்- உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள்(47:33)

இன்னும் அல்லாவுக்கும் வழிபடுங்கள், இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள்,எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், இதனை நீங்கள் புறக்கணித்து விட்டால், நம் கட்டளைகளை தெளிவாக விளங்குவது நம் தூதர் மீது கடமையாகும் எனபதை புரிந்து கொள்ளுங்கள்(5:92)

அல்லாவுக்கும் வழிபடுங்கள்,இன்னும் ரஸீலுக்கும் வழிபடுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக! நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட இத்தூது செய்தியை அறிவிப்பு செய்வது தான்; இன்னும் உங்கள் மீதுள்ளா கடமையானது உங்கள் சுமத்தப்படி வழிபடுவானது; எனவே நீங்கள் அவருக்கு கீழ்படிந்து நீங்கள் நேர்வழிப் பெறுவீர்கள், இன்னும் நம் தூதை தெளிவாக எடுத்துரைப்பது தவர வேறெதும் தூதர்மீது இல்லை(24:54)

அல்லாஹ்வை நீங்கள் வழிபடுங்கள்:அவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்: எனக்கு வழிபடுங்கள்(71:3)

மேலும் அல்லாவும், அவனுடைய தூதரும் ஒரு காரியதை பற்றி கட்டளையிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமை இல்லை, ஆகவே அல்லாவுக்கும் அவனுடைய ரஸீலுக்கும் மாறு செய்தால் நிச்சியமாக அவர்கள் பகிரங்க வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்(33:36)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக